சென்னை திரு. வி.க. நகர் கிருஷ்ணா நகர் பிரதான சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் பழைய குழாயை எடுத்துவிட்டு புதிய குழாய்கள் பதிக்கப்பட்டன. தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததால், பொது மக்களும், வாகன ஓட்டிகளும் சாலையைக் கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, இப் பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.ஜெயகோபால்,
திரு. வி.க. நகர்.