சென்னை மேற்கு சைதாப்பேட்டை மசூதி தெருவில் இயங்கி கொண்டிருந்த தபால்துறை அலுவலகம், சில ஆண்டுகளுக்கு முன்னால் அகற்றப்பட்டது. தற்போதைய சூழலில் பொதுமக்களுக்கு வைப்பு நிதி, முதியோருக்கு சிறப்பு சலுகை மற்றும் குழந்தைகளுக்கான வருங்கால வைப்புநிதி போன்ற திட்டங்களை தபால்துறை அமல்படுத்தி வருகிறது. ஆனால், அந்தத் திட்டங்களில் சேருவதற்குரிய தபால் அலுவலகம் மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் இல்லை. எனவே, இப்பகுதியில் மீண்டும் தபால் அலுவலகத்தைத் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரா.எத்திராஜன், மேற்கு சைதாப்பேட்டை.