சென்னை அமைந்தகரை சிக்னல் முதல் எஸ்.எஸ். சாகிப் தெரு வரை உள்ள 30 இணைப்புகள் மட்டும் அடிக்கடி பழுதடைகின்றன. வாரம் மூன்று முறை இங்கு மின் தடை ஏற்படுகிறது. இங்குள்ள மின்சார வயர்கள், புதை மின்தடங்கள் மிகவும் பழுதடைந்துள்ளதாலேயே இவ்வாறு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்தப் பகுதியை மின் வாரிய உயரதிகாரிகள் ஆய்வு செய்து, மின் வயர்களை சீரமைக்க வேண்டும்.
முகம்மது ரியாசுதின்,
அமைந்தகரை.