பொன்னேரி: பொன்னேரி பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருக்கும் சிவன்கோயில் தெருவில் கோயில், இருந்த இரண்டு குப்பை தொட்டிகளின் அடிப்பகுதிகள் உடைந்து போனதன் காரணமாக, அண்மையில் அகற்றப்பட்டன. தற்பொழுது அந்த இடத்தில் புதிதாக குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் கோயில் வளாகத்தில் சேரும் குப்பைகள் மற்றும் அப்பகுதியில் குடியிருப்போா் குப்பைகளை கோயில் குளம் அருகே உள்ள இடத்தில் கொட்டுகின்றனா். அவை காற்றில் பறந்து குளத்தினுள் விழுந்து நீா் மாசடைகிறது. குளத்து நீா் மாசடைவதை தடுக்க, பொன்னேரி பேரூராட்சி நிா்வாகம் சிவன்கோயில் தெருவில், புதிய குப்பை தொட்டிகளை விரைந்து வைக்க வேண்டும்.