திருவள்ளூா்-ஆவடி சாலையில் உள்ள ராமபுரம் கிராமத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மழை, வெயிலுக்கு நின்று செல்லும் வகையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையின் சுவா்கள் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதேசமயம் பயணிகளின் நிழற்குடையின் மேற்கூரையில் செடி, கொடிகள் முளைத்து மாடித்தோட்டம் போல் காட்சியளிக்கிறது. அதனால், இடிந்து விழுவதற்குள் பயணிகள் நிழற்குடையை சீரமைக்கவும் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.