சென்னை மாநகர பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, கிண்டி, வடபழனி, தி.,நகர், சைதாப்பேட்டை போன்ற பேருந்து நிறுத்தங்களில் அதிகளவில் பயணிகள் நிற்கின்றனர். இதனால் பேருந்தில் ஏறிய பிறகு பயணச்சீட்டு வாங்கி பயணிக்க நேரம் அதிகமாகிறது. இதனால் காலதாமதம் ஆகி பயணிகள் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே, பயணிகள் அதிகம் கூடும் இடங்களிலேயே போக்குவரத்துத் துறையினர் பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுத்தால் மிகவும் வசதியாக இருக்கும்.
இரா.எத்திராஜன்,
சைதாப்பேட்டை.