திருவான்மியூரில் உள்ள பிரதான தெருக்களில் பிள்ளையார் கோயில் தெரு முக்கியமானதாகும். இங்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக தார்ச்சாலை அமைப்பதற்காக தோண்டப்பட்டது. ஆனால் இதுநாள் வரை சாலை அமைக்கப்படவில்லை. எனவே, வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்லும் இச்சாலையை தாமதமின்றி சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.உதயகுமார், திருவான்மியூர்.