ராயப்பேட்டையில் உள்ள புதுப்பேட்டை கார்டன் 2}ஆவது தெருவில் மழைநீர் சேமிப்புக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படவில்லை. மேலும் ஆங்காங்கே புதை சாக்கடை மூடி சற்று உயரமாக உள்ளதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் விபத்துக்குள்ளாகும் நிலையுள்ளது. இதனைச் செப்பனிட மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.