வேளச்சேரி தொடங்கி சைதாப்பேட்டை, நந்தனம், ஆழ்வார்பேட்டை வழியாக அண்ணா சதுக்கம் வரை செல்லும் 45.ஏ எண் பேருந்துகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. இதனால் நாள்தோறும் இந்த வழித்தட பேருந்துகளைப் பயன்படுத்தும் பெண்கள், மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த வழித்தட பேருந்துகளின் எண்ணிக்கையை 15 நிமிஷ இடைவெளியில் செல்லும் வகையில் அதிகப்படுத்த வேண்டும்.
இரா.எத்திராஜன், சைதாப்பேட்டை மேற்கு.