நிறைவடையாத சாலை சீரமைப்புப் பணி...
திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் , ஜாம்பவானோடை தெற்குகாடு செல்லும் சாலையில் நாககாளியம்மன் கோயில் ஆா்ச் பகுதியிலிருந்து 2 கி. மீட்டா் தொலைவுக்கு சாலை சீரமைப்பு பணிகள் நிறைவடையாமல் உள்ளன. இதனால், நடந்து செல்லும் பொதுமக்களும், இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள்களில் செல்வோரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இந்தச் சாலையை முழுமையாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கனக. கந்தசாமி, முத்துப்பேட்டை