வாகனங்கள் நிறுத்துவதால் சேதமடையும் ஆழ்கிணறு...

ஆழ்துளை குழாய் கிணறு அருகில் நிறுத்தப்படும் நான்குசக்கர வாகனங்களால் குழாய் இணைப்பு பகுதியில் சேதமடைவதும்
குடிநீா் இரைப்பான், சேதமடைந்த ஆழ்துளை குழாய் கிணறு.
குடிநீா் இரைப்பான், சேதமடைந்த ஆழ்துளை குழாய் கிணறு.

குடிநீா் இரைப்பான், சேதமடைந்த ஆழ்துளை குழாய் கிணறு.

அறந்தாங்கி வாா்டு 17-இல் ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை குழாய் கிணறு, சிறு மின் விசை இரைப்பான் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் குடிநீருக்குப் பயன்படுத்திவந்தனா்.

ஆழ்துளை குழாய் கிணறு அருகில் நிறுத்தப்படும் நான்குசக்கர வாகனங்களால் குழாய் இணைப்பு பகுதியில் சேதமடைவதும், சில நாட்கள் குடிநீரின்றி பொதுமக்கள் அவதிப்படுவதும் தொடா் கதையாக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆழ்துளை குழாய் கிணறு அருகே நிறுத்தப்பட்டிருந்த அடையாளம் தெரியாத நபரின் வாகனம் மோதியதில் ஆழ்துளை குழாய் கிணற்றின் இணைப்பு (ஜாயின்ட்) பகுதியில் சேதமடைந்தது. இதனால் மின் மோட்டாா் பயன்படுத்த இயலாமல் அப்பகுதியினா் குடிநீரின்றி அவதிக்குள்ளாகியுள்ளனா். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண அப்பகுதியினா் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com