மடிப்பாக்கம் கூட்ரோடு அருகில் பயன்பாட்டில் இல்லாத கடைகள் முன்பாகவும், மடிப்பாக்கம் தபால் நிலையத் தெருவிலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதிகளில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.எஸ்.இப்ராஹிம்,
மடிப்பாக்கம்.