பெசன்ட்நகர் முதல் கிண்டி ராஜ்பவன் வழியாக சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் தடம் எண். 23சி, 5ஈ, 47 உள்ளிட்ட மாநகரப் பேருந்துகள், சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில் நிற்பதில்லை. மாறாக, பனகல் மாளிகை அருகில்தான் பேருந்துகள் நிற்கின்றன. அங்கிருந்து, மெட்ரோ ரயில் நிலையத்தை அடைய நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது. எனவே, மெட்ரோ ரயில் நிலையம் முன் பேருந்து நிறுத்தம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரா.எத்திராஜன்,
மேற்கு சைதாப்பேட்டை.