சென்னை, திரு.வி.க. நகர் பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணா சதுக்கம், திருவேற்காடு போன்ற பகுதிகளுக்கு நேரடிப் பேருந்து வசதிகள் இல்லை. எனவே, பெரம்பூரில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்லும் தடம் எண் 29ஏ, 29ஈ ஆகிய மாநகரப் பேருந்துகளை திரு.வி.க. நகர் வரை நீட்டிக்க வேண்டும். ஆனால், மேற்கண்ட தடம் எண் பேருந்துகளை நீட்டித்தால் பெரம்பூர் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கின்றனர் மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள். எனவே, திரு.வி.க.நகரில் இருந்து அண்ணா சதுக்கம், திருவேற்காடு போன்ற பகுதிகளுக்கு புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும்.
ஆ.ஜெயகிருஷ்ணன்,
சென்னை-82.