போக்குவரத்து நெரிசல்
By DIN | Published On : 17th February 2020 03:13 AM | Last Updated : 17th February 2020 03:13 AM | அ+அ அ- |

சென்னை பம்மல் இரட்டை பிள்ளையார் கோயில் பகுதியிலிருந்து திருநீர்மலை சாலையை இணைக்கும் அண்ணாசாலையில் பி.பி.ஜெயின் மருத்துவமனை வரை இருபுறமும் உள்ள நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் வாகனங்கள் நீண்ட நேரம் நிற்கும் நிலை தொடர்கிறது. எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, சம்பந்தப்பட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர். மனோகரன், பம்மல்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...