பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து திருமழிசை வரை செல்லும் தடம் எண்.53ஏ மாநகர சொகுசுப் பேருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை என 4 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. திருமழிசை, நசரத்பேட்டை ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள 10}க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், சென்னையை நோக்கி பணிக்காக வர இந்த வழித்தடத்தையே நம்பியுள்ளனர். பேருந்து குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுவதால், காலையில் பணிக்கு வரவும் மாலை வீடுக்குத் திரும்பவும் கிராம மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்க வேண்டும்.
கோதை ஜெயராமன், அரும்பாக்கம்.