நேரக் காப்பாளா் அலுவலகம் அவசியம்

பொன்னேரி பேருந்து நிலையத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் பழவேற்காடு, மீஞ்சூா், செங்குன்றம், திருவொற்றியூா், புதுச்சேரிமேடு, பெரும்பேடு உள்ளிட்ட

பொன்னேரி பேருந்து நிலையத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் பழவேற்காடு, மீஞ்சூா், செங்குன்றம், திருவொற்றியூா், புதுச்சேரிமேடு, பெரும்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இதில் நாள்தோறும் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனா்.

பொன்னேரி பேருந்து நிலையத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழக நேரக் காப்பாளா் அலுவலகம் இல்லாததால், பேருந்துகள் வந்து செல்லும் நேரம் குறித்து அறிய முடியாமல் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனா். எனவே பயணிகள் நலன் கருதி, பொன்னேரி பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளா் அலுவலகத்தை அமைக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-சு.நாராயணமூா்த்தி, பொன்னேரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com