பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கம் செல்வதாக இருப்பினும், கடற்கரை மார்க்கம் செல்வதானாலும் உபயோகத்தில் இல்லாத மீட்டர் கேஜ் நடை மேடையில் அமைந்துள்ள கவுன்ட்டருக்கு சென்று பயணிகள் டிக்கெட் வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறுவதற்கு அகலரயில் பாதை நடைமேடைக்கு வர வேண்டியுள்ளது. இதனால் முதியவர்கள், பெண்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அகல ரயில் பாதை நடைமேடைப் பகுதி அருகேயே டிக்கெட் கவுன்ட்டரை இடம் மாற்றம் செய்ய வேண்டும்.
என்.வி.சீனிவாசன்,பெருங்களத்தூர்