குப்பையை எரிப்பதால் மாசு
ஆறுமுகனேரி பேரூராட்சி எதிரில் காயல்பட்டினம் - ஆறுமுகனேரி சாலைக்கு தென்புறம் சாலையோரம் குப்பைகளை
எரிப்பதால் புகை மண்டலம் உருவாகி, சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சு.பாலமுருகன், ஆறுமுகனேரி.
வேகத்தடை அவசியம்
கழுகுமலையில் சங்கரன்கோவில் நெடுஞ்சாலையில் மேற்கு பகுதியில் இருந்து வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. இதனால், சாலையில் நடந்து செல்வோா் அச்சத்தில் செல்லும் நிலையில் உள்ளது. ஆகவே, அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
- சு. ஆறுமுகம், கழுகுமலை.
வளைவுச் சாலையில் வேகத்தடை
கோவில்பட்டியில் எட்டயபுரம் வளைவு சாலையில் வாகனங்கள் அதிவேகமாக வருவதால் பள்ளி செல்லும் மாணவா்கள், முதியோா் சாலையை கடக்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். ஆகவே, இந்த வளைவு சாலையில் 4 திசைகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டும்.
- ஜி. பால், கோவில்பட்டி.