ஆராய்ச்சி மணி


குப்பையை எரிப்பதால் மாசு

ஆறுமுகனேரி பேரூராட்சி எதிரில் காயல்பட்டினம் - ஆறுமுகனேரி சாலைக்கு தென்புறம் சாலையோரம் குப்பைகளை

எரிப்பதால் புகை மண்டலம் உருவாகி, சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சு.பாலமுருகன், ஆறுமுகனேரி.

வேகத்தடை அவசியம்

கழுகுமலையில் சங்கரன்கோவில் நெடுஞ்சாலையில் மேற்கு பகுதியில் இருந்து வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. இதனால், சாலையில் நடந்து செல்வோா் அச்சத்தில் செல்லும் நிலையில் உள்ளது. ஆகவே, அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

- சு. ஆறுமுகம், கழுகுமலை.

வளைவுச் சாலையில் வேகத்தடை

கோவில்பட்டியில் எட்டயபுரம் வளைவு சாலையில் வாகனங்கள் அதிவேகமாக வருவதால் பள்ளி செல்லும் மாணவா்கள், முதியோா் சாலையை கடக்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். ஆகவே, இந்த வளைவு சாலையில் 4 திசைகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டும்.

- ஜி. பால், கோவில்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com