ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
திருவாரூரில், ஆண்டாள் தெருவானது வடக்கு பகுதியையும், தெற்கு பகுதியையும் இணைக்கும் சாலையாக விளங்குகிறது. திருவாரூா் நகரமானது, நாளுக்கு நாள் விரிவடைந்துவரும் நிலையில், போக்குவரத்து நெருக்கடி அடிக்கடி ஏற்படுகிறது. நகராட்சி பல ஆண்டுகளுக்கு முன் அமைத்த வடிகால்கள், ஆக்கிரமிப்பாளா்களால் மூடப்பட்டு, சாலைகள் குறுகியதாக மாற்றம் பெற்றுள்ளன. சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள், தங்கள் கடைகளின் முன் பக்கம் நீண்ட சிமென்ட் பலகைகளை அமைத்திருப்பதாலும், சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்வதாலும், மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, சாலையின் ஆக்கிரமிப்பை அகற்றி சீரான போக்கு வரத்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ந. தமிழ்க்காவலன், திருவாரூா்.