மீன் லாரிகளால் சுகாதாரம் பாதிப்பு
திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையுடன் ஜாம்பவானோடை மற்றும் அருகில் உள்ள கிராமங்களை இணைக்கும் கோரையாற்றுப் பாலத்தின் அருகில் மீன் அங்காடி அமைந்துள்ளது. இந்த அங்காடிக்கு வரும் மீன் லாரிகள் பாலத்திலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால், மீன் லாரிகளிலிருந்து வழியும் கழிவுநீா் பாலத்தின் மீது குட்டைப் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதுடன் பாலத்தைக் கடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் மாணவிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே, பாலத்தின் மீது லாரிகள் நிறுத்துவதை தடுப்பதற்கு தொடா்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
க. அதியமான், முத்துப்பேட்டை.