பதச் சேதம் | சொற் பொருள் |
| பங்கமாகிய விட புயங்க மா படம் அது பறித்துச் சிவத்து அருந்திப் | பங்கம் ஆகிய: கெடுதியே வடிவெடுத்த; புயங்க: புஜங்க (தோளே உடல் என்று வடிவான) பாம்பு; சிவத்து: சினந்து, கோபித்து |
| பகிரண்ட முழுதும் பறந்து நிர்த்தங்கள் புரி பச்சைக் கலாப மயிலைத் | பகிர் அண்டம்: அண்ட வெளிக்கு அப்பாற்பட்ட, வெளியிலுள்ள இன்னொரு அண்டம்; நிர்த்தம்: நடனம்; கலாபம்: தோகை |
| துங்கமாய் அன்புற்று வன்புற்று அடர்ந்துவரு துடரும் பிரேத பூதத் | துங்கமாய்: தூய்மையாய், பரிசுத்தமாய்; வன்புற்று: வலிமை வாய்ந்து; அடர்ந்து: நெருங்கி; துடரும்: தொடரும் |
| தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும் துண்டப் படக் கொத்துமாம் | பசாசு: பிசாசு; நிசாசரர்: (நிசியில் சஞ்சரிப்பவர்—இரவில் உலவுபவர்) அரக்கர்; அடங்கலும்: அனைவரும், மொத்தமும்; |
| மங்கை யாமளை குமரி கங்கை மாலினி கவுரி வஞ்சி நான்முகி வராகி | யாமளை: ஸ்யாமளா, பச்சை நிறத்தவள்; குமரி: கன்னி; மாலினி: மாலைகளை அணிந்தவள்; கௌரி: பொன் நிறமானவள்; நான்முகி: நான்கு முகங்களைக் கொண்டவள்; பிராமி |
| மலையரையன் உதவு அமலை திருமுலையில் ஒழுகுபால் மகிழ அமுதுண்ட பாலன் | மலையரையன்: மலையரசன்; உதவும்: பெற்ற; திருமுலையில் ஒழுகுபால் மகிழ அமுதுண்டபாலன்: திருஞான சம்பந்தராக அவதரித்த முருகன்; |
| செங்கணன் மதலையிடம் இங்குளான் என்னு நரசிங்கமாய் இரணியன் உடல் | செங்கணன்: தாமரைக் கண்ணன், திருமால்; மதலை: தூண் (தூண் என்றும் பொருளுண்டு) |
| சிந்த உகிரில் கொடு பிளந்த மால்மருமகன் சேவல் திருத் துவசமே. | உகிரில்: நகத்தில்; கொடு: கொண்டு; மால்மருகன்: திருமாலின் மருமகன் |
</p><p align="JUSTIFY"><iframe src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/238331256&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" /></p><p align="JUSTIFY"><br /><strong>பங்கமாகிய விட</strong> <strong>புயங்க மா படமது</strong>... கெடுதியே வடிவெடுத்த விஷம் கொண்டதாகிய பாம்பின் படத்தை,</p><p align="JUSTIFY"><strong>பறித்து</strong> ...துண்டாகும்படிப் பறித்து,</p><p align="JUSTIFY"><strong>சிவத்தருந்தி</strong> ... சினம் கொண்டு, அதைத் தின்று,</p><p align="JUSTIFY"><strong>பகிரண்ட முழுதும் பறந்து</strong> <strong>நிர்த்தமிடும்</strong>... புறஅண்டங்கள் முழுவதிலும் பறந்து திரித்து, நடனமாடுவதாகிய,</p><p align="JUSTIFY"><strong>பச்சைக் கலாப மயிலை</strong> ... பச்சை வண்ணத் தோகையை உடையதாகிய மயிலோடு,</p><p align="JUSTIFY"><strong>துங்கமாய் அன்புற்று</strong> ... பரிசுத்தமான அன்பைப் பூண்டுகொண்டு;</p><p align="JUSTIFY"><strong>வன்புற்று</strong> <strong>அடர்ந்து வரும்</strong>... மிக்க வலிமையோடு நெருங்கி வந்து<br />... நெருங்கி வந்து (நம்மைத்),</p><p align="JUSTIFY"><strong>துடரும் பிரேத பூத தொகுதிகள்</strong>.. தொடர்வன ஆகிய, பிணம், பூதங்களுடைய கூட்டங்களையும்;</p><p align="JUSTIFY"><strong>பசாசுகள்</strong> ... பிசாசுகளையும்,</p><p align="JUSTIFY"><strong>நிசாசரர் அடங்கலும்</strong> ... அரக்கர் கூட்டம் முழுமையையும்,</p><p align="JUSTIFY"><strong>துண்டப் பட கொத்துமாம்</strong> ... துண்டங்களாகச் சிதறும்படிக் கொத்தும்</p><p align="JUSTIFY">(அப்படிக் கொத்துவது எது என்று கேட்டால்)</p><p align="JUSTIFY"><strong>மங்கை</strong> ... மங்கையாகவும்,</p><p align="JUSTIFY"><strong>யாமளை</strong> ... யாமளை என்பதான பச்சைநிறமுடைய ச்யாமளையாகவும்,<br /><br /><strong>குமரி</strong> ... குமாரியாகவும்,</p><p align="JUSTIFY"><strong>கங்கை</strong> ... கங்கையாகவும் (விளங்குபவளும்);</p><p align="JUSTIFY"><strong>மாலினி</strong> ... மாலைகளை அணிந்திருப்பவளாகவும்,</p><p align="JUSTIFY"><strong>கவுரி</strong> ... கௌரி என்ற பொன்னிறத்தவளாகவும்;</p><p align="JUSTIFY"><strong>வஞ்சி</strong> ... கொடி போன்றவளாகவும்,</p><p align="JUSTIFY"><strong>நான்முகி</strong> ... நான்கு முகங்களை உடைய பிராமியாகவும்,</p><p align="JUSTIFY"><strong>வராகி</strong> ... வராகியாகவும்,</p><p align="JUSTIFY"><strong>மலை அரையன் உதவு அமலை</strong> ... மலையரசனாகிய இமவான் பெற்ற அப்பழுக்கற்றவளும் (பரிசுத்தமானவளும்) — ஆன உமையம்மையின் <br /><br /><strong>திரு முலையில் ஒழுகு பால்</strong> ... திருமுலையிலிருந்து பெருகிய பால் அமுதத்தை,</p><p align="JUSTIFY"><strong>மகிழ அமுதுண்ட பாலன்</strong> ... மகிழ்ச்சியோடு பருகிய திருஞானசம்பந்தராய் அவதரித்த பாலனாகிய முருகன்;</p><p align="JUSTIFY"><strong>செங்கணண்</strong> ... சிவந்த கண்களை உடையதால் செங்கணான் என்றழைக்கப்படும் திருமால்,</p><p align="JUSTIFY"><strong>மதலையிடம் இங்குளான் என்னும்</strong> ... இதோ இங்கே தூணில் இருக்கிறான் என்று (தன் தந்தையிடம் பிரகலாதன்) சுட்டிக்காட்டிய</p><p align="JUSTIFY"><strong>நரசிங்கமாய் இரணியனுடல்</strong> ... நரசிம்மமாய் அவதரித்து இரணியகசிபுவின் உடலை,</p><p align="JUSTIFY"><strong>சிந்த உகிரில் கொடு பிளந்த மால் மருமகன்</strong> ... (குருதி) சிந்தும்படியாக, நகங்களைக் கொண்டு பிளந்தவனான திருமாலுடைய மருமகனான முருகனுடைய</p><p align="JUSTIFY"><strong>சேவல் திருத் துவசமே</strong> ... கொடியிலே விளங்குவதாகிய சேவலேதான் அதுவாகும்.</p><p align="JUSTIFY"><em>கொடுமையை விளைவிக்கின்ற விஷத்தைக் கொண்டதாகிய பாம்பின் பெரிய படத்தைக் கொண்ட தலையைப் பறித்துத் துண்டாக்கி, சினத்துடன் உண்டு, வெளியண்டங்கள் எங்கிலும் பறந்து திரிந்து வந்து நடஞ்செய்யும் பச்சைத் தோகையையுடைய மயிலிடம் தூய அன்பு கொண்டும்; வலிமையோடு (நம்மை) நெருங்கித் தொடர்ந்து வருகின்ற பிணப்பேய்களையும் மற்ற பிசாசுகளையும், துண்டங்களாகச் சிதறும்படிக் கொத்தும். அப்படி எது கொத்தும் என்று கேட்பீர்களானால்,</em></p><p align="JUSTIFY"><em>மங்கை, யாமளை, குமரி, கங்கை, மாலினி, கௌரி, வஞ்சி (கொடி), நான்முகி, வராகி, பர்வதராஜன் புதல்வி — என்றெல்லாம் அறியப்படும் உமையம்மையின் திருமார்பில் பெருகிய ஞானப்பாலை உண்டு களித்த (திருஞானசம்பந்தராய் அவதரித்த)வனும்;</em></p><p align="JUSTIFY"><em>செந்தாமரை போலக் கண்களைக் கொண்டவனும்; ‘இறைவன்தானே, இதோ இங்கேதான் இருக்கிறான்’ என்று தூணைச் சுட்டிக்காட்டிய பிரகலாதன் (காட்டிய தூணைப் பிளந்துகொண்டு வெளிப்பட்டு) நரசிம்மமாய் வடிவெடுத்து, பிரகலாதனுடைய தந்தையான இரணியகசிபுவின் உடலை நகங்களைக் கொண்டு பிளந்தவரான மஹாவிஷ்ணுவின் மருமகனான,</em></p><p align="JUSTIFY"><em>முருகனுடைய கொடியில் விளங்குவதான சேவல்தான் அதுவாகும்.</em></p><p> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.