திருவண்ணாமலைத் தலத்துக்கான இன்றைய பாடல், நாயகி பாவத்தில் பாடப்பட்டது. இறைவனை மயில் மீதில் ஏறி எப்போதும் வரவேண்டும் என்று கோரும் பாடல்.
அமைப்பு முறையில் அடிக்கு ஒற்று நீக்கி 31 எழுத்துகள்; 1, 4, 7 ஆகிய சீர்களில் குற்றெழுத்துகள்; 2, 5, 8 ஆகிய சீர்களின் முதலெழுத்து நெடில்; 3, 6, 9 ஆகிய சீர்களின் இரண்டாமெழுத்து வல்லொற்று.
தனனதன தான தத்த தனனதன தான தத்த
தனனதன தான தத்த - தனதான
தருணமணி வானி லத்தி லருணமணி யால விட்ட
தழலமளி மீதெ றிக்கு - நிலவாலே
தலைமைதவி ராம னத்தி னிலைமையறி யாதெ திர்த்த
தறுகண்மத வேள்தொ டுத்த - கணையாலே
வருணமட மாதர் கற்ற வசையின் மிகை பேச முற்று
மருவுமென தாவி சற்று - மழியாதே
மகுடமணி வாரி சைக்கும் விகடமது லாவு சித்ர
மயிலின் மிசை யேறி நித்தம் - வரவேணும்
கருணையக லாவி ழிச்சி களபமழி யாமு லைச்சி
கலவிதொலை யாம றத்தி - மணவாளா
கடுவுடைய ராநி ரைத்த சடிலமுடி மீது வைத்த
கடியமல ராத ரித்த - கழல்வீரா
அருணமணி யால மைத்த கிரணமணி சூழும் வெற்றி
அருணை நகர் கோபு ரத்தி - லுறைவோனே
அசுரர்குலம் வேர றுத்து வடவனலை மீதெ ழுப்பி
அமரர்சிறை மீள விட்ட - பெருமாளே.