பகுதி - 418

திருவண்ணாமலைத் தலத்துக்கான இன்றைய பாடல்,

திருவண்ணாமலைத் தலத்துக்கான இன்றைய பாடல், நாயகி பாவத்தில் பாடப்பட்டது.  இறைவனை மயில் மீதில் ஏறி எப்போதும் வரவேண்டும் என்று கோரும் பாடல்.

அமைப்பு முறையில் அடிக்கு ஒற்று நீக்கி 31 எழுத்துகள்; 1, 4, 7 ஆகிய சீர்களில் குற்றெழுத்துகள்; 2, 5, 8 ஆகிய சீர்களின் முதலெழுத்து நெடில்; 3, 6, 9 ஆகிய சீர்களின் இரண்டாமெழுத்து வல்லொற்று.

தனனதன தான தத்த தனனதன தான தத்த
      தனனதன தான தத்த   -   தனதான

தருணமணி வானி லத்தி லருணமணி யால விட்ட
         தழலமளி மீதெ றிக்கு   -     நிலவாலே
      தலைமைதவி ராம னத்தி னிலைமையறி யாதெ திர்த்த
         தறுகண்மத வேள்தொ டுத்த -   கணையாலே      
வருணமட மாதர் கற்ற வசையின் மிகை பேச முற்று
         மருவுமென தாவி சற்று   -     மழியாதே
      மகுடமணி வாரி சைக்கும் விகடமது லாவு சித்ர
         மயிலின் மிசை யேறி நித்தம் -  வரவேணும்
கருணையக லாவி ழிச்சி களபமழி யாமு லைச்சி
         கலவிதொலை யாம றத்தி  -   மணவாளா
      கடுவுடைய ராநி ரைத்த சடிலமுடி மீது வைத்த
         கடியமல ராத ரித்த    -      கழல்வீரா
அருணமணி யால மைத்த கிரணமணி சூழும் வெற்றி
         அருணை நகர் கோபு ரத்தி -   லுறைவோனே
      அசுரர்குலம் வேர றுத்து வடவனலை மீதெ ழுப்பி
         அமரர்சிறை மீள விட்ட  -     பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com