பகுதி - 706

என்னை ஆண்டருள வேண்டும்
பகுதி - 706
Updated on
1 min read

‘அடியேன் சிவஸ்வரூப மஹாயோகியாகுமறு என்னை ஆண்டருளவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருவானைக்காவுக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றையும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்கும் இரண்டு எழுத்துகளையும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்கள் இரண்டு நெட்டெழுத்தும் ஒரு குற்றெழுத்துமாக மூன்றெழுத்துகளையும் கொண்டு அமைந்துள்ளன.


தனத்த தான தானான தனத்த தான தானான
      தனத்த தான தானான               தனதான

அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி
         யடைத்து வாயு வோடாத        வகைசாதித்

தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
         அசட்டு யோகி யாகாமல்         மலமாயை

செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
         சிரத்தை யாகி யான்வேறெ       னுடல்வேறு

செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத
         சிவச்சொ ரூப  மாயோகி         யெனஆள்வாய்

தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால
         சுதற்கு நேச மாறாத              மருகோனே

சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால
         தொடுத்த நீப வேல்வீர           வயலூரா

மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி
         மகப்ர வாக பானீய               மலைமோதும்

மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு
         மதித்த சாமி யேதேவர்           பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com