‘உன்னைத் தமிழால் போற்றவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது,
அடிக்கு ஒற்றொழித்து 26 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என மூன்றெழுத்துகளும்; இரண்டு, ஏழு ஆகிய சீர்களிலும் நான்கு, எட்டு ஆகிய சீர்களிலும் இரண்டு குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளுமாக இரண்டெழுத்துகளும்; மூன்று, எட்டு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என மூன்றெழுத்துகளும்; ஐந்து, ஒன்பது ஆகியவை தொங்கல் சீர்கள்.
தானத் தத்தத் தத்தன தத்தத் தனதான
தானத் தத்தத் தத்தன தத்தத் தனதான
வானப் புக்குப் பற்றும ருத்துக் கனல்மேவு
மாயத் தெற்றிப் பொய்க்குடி லொக்கப் பிறவாதே
ஞானச் சித்தித் சித்திர நித்தத் தமிழாலுன்
நாமத் தைக்கற் றுப்புகழ் கைக்குப் புரிவாயே
கானக் கொச்சைச் சொற்குற விக்குக் கடவோனே
காதிக் கொற்றப் பொற்குல வெற்பைப் பொரும்வேலா
தேனைத் தத்தச் சுற்றிய செச்சைத் தொடையோனே
தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் பெருமாளே.