அனுபூதியாகிய அனுபவ ஞானத்தைக் கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் மூன்று குறிலுமாய் நான்கெழுத்துகளும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும், இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக மூன்றெழுத்துகளும்; மூன்றும் ஆறுமாக அமைந்திருக்கும் தொங்கல் சீர்களில் நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.
தானதன தானனத் தனதான
நாரியர்க ளாசையைக் கருதாதே
நானுனிரு பாதபத் மமுநாட
ஆரமுத மானசர்க் கரைதேனே
ஆனஅநு பூதியைத் தருவாயே
காரணம தானவுத் தமசீலா
கானகுற மாதினைப் புணர்வோனே
சூரர்கிளை தூளெழப் பொரும்வேலா
தோகைமயில் வாகனப் பெருமாளே.