

‘உன் திருவடிகளை எப்போதும் துதிக்க வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.
அடிக்கு ஒற்றொழித்து 24 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று முதல் ஆறு வரையிலான எல்லாச் சீர்களிலும் மூன்று மூன்று குற்றெழுத்துகளால் அமைந்திருக்கின்றன.
தனன தனன தனன தனன
தனன தனன தனதான
பணிகள் பணமு மணிகொள் துகில்கள்
பழைய அடிமை யொடுமாதும்
பகரி லொருவர் வருக அரிய
பயண மதனி லுயிர்போகக்
குணமு மனமு முடைய கிளைஞர்
குறுகி விறகி லுடல்போடாக்
கொடுமை யிடுமு னடிமை யடிகள்
குளிர மொழிவ தருள்வாயே
இணையி லருணை பழநி கிழவ
இளைய இறைவ முருகோனே
எயினர் வயினின் முயலு மயிலை
யிருகை தொழுது புணர்மார்பா
அணியொ டமரர் பணிய அசுரர்
அடைய மடிய விடும்வேலா
அறிவு முரமு மறமு நிறமு
மழகு முடைய பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.