ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4-ஆம் தேதி கோல்ப் விளையாடுபவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
1952-ஆம் ஆண்டிலிருந்து இந்த தினமானது 'உலக தொழில்முறை கோல்ப் விளையாடுவோர் கூட்டமைப்பு' சார்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு உதவும் வகையில் கண்காட்சி போட்டிகள் நடத்தப்படும். வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட உலகின் முதல் கோல்ப் விளையாட்டு கி.பி 1456-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரத்தில் உள்ள ப்ரண்ட்ஸ்பீல்டு என்ற இடத்தில் நடந்துள்ளது.
இப்போது உள்ள நவீன வடிவத்தில் விளையாடப்படும் கோல்ப் விளையாட்டானது, ஸ்காட்லாந்தில் இருந்து இங்கிலாந்துக்கு வந்து அங்கிருந்து உலகின் பல பாகங்களுக்கும் பரவி உள்ளது.