ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 8-ஆம் தேதி சர்வதேச கல்வியறிவு தினமாக கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் கல்வியறின்மையை ஒழிக்க ஆவண செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், 1965-ஆம் ஆண்டு இரான் தலைநகர் டெஹ்ரானில், சர்வதேச நாடுகளின் கல்வி அமைச்சர்களின் மாநாடு ஒன்று நடைபெற்றது இந்த மாநாட்டின் முடிவுகள் 'டெஹ்ரான் பிரகடனம்' என்ற பெயறில் அழைக்கப்பட்டது.
எனவே இந்த ஆண்டு சர்வதேச கல்வியறிவு தினமானது, டெஹ்ரான் மாநாட்டின் பொன்விழா ஆண்டாகவும் கொண்டாடப்படுகிறது.
மக்களின் அடைப்படை உரிமையாகவும், வாழ்நாள் முழுமைக்குமான கற்றலுக்கு ஆதராமாக விளங்குவதுமான கல்வியை அனைவரும் பெற தொடர்ந்து உழைப்போம்.