தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி தன்னுடைய 20 வயதில், ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றத் தொடங்கினார். அன்று முதல் திரைக்கதை மற்றும் பாடல் எழுதுவதில் அவரது திறமையை நிரூபிக்கத்தொடங்கினார்.
அவரது முதல் படமான ராஜகுமாரி மிகப்பெரிய வெற்றியடைந்து எழுத்துக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தீவிர அரசியலில் ஈடுபட்ட பின்னரும், திரைப்படங்களுக்கு எழுதுவது தொடர்ந்தது. 2011-ஆம் ஆண்டு வெளிவந்த பொன்னர் சங்கர் திரைப்படம், திரைத்துறையில் அவருடைய எழுத்தில் வெளியான கடைசி திரைப்படமாக அமைந்தது.