TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 14

நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து" என்ற கவிமணியின்
TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 14
Updated on
3 min read

நாடகக்கலை

பொருள் விளக்கம்:

* நாடு + அகம் = நாடகம்

* நாட்டை அகத்தில் கொண்டது நாடகம்.

* நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால், நாடகம் எனப் பெயர் பெற்றது.

* நாடகம் என்பது உலக நிகழ்சிகளைக் காட்டும் கண்ணாடி என்பது முற்றிலும் பொருந்தும்.

* கதையை, நிகழ்ச்சியை, உணர்வை நடித்துக்காட்டுவதும், கூத்தாக ஆடிக்காட்டுவதும் நாடகம் என்பர்.

* இதற்குக் கூத்துக்கலை என்னும் பெயரும் உண்டு.

நாடகக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும்:

* தமிழின் தொன்மையான கலை வடிவம் நாடகம்.

* நாடகம் எனபது "போலச் செய்தல்" என்னும் பண்பு அடிப்படையாக கொண்டது.

* பிறர் செயவதைப்போல தாமும் செய்து பார்க்க வேண்டும் என்ற மனித உணர்ச்சிதான் நாடகம் தோன்றக் காரணம்.

* மரப்பாவைக்கூத்து - பொம்மலாட்டம் - தோல்பாவைக்கூத்து - நிழற்பாவைக்கூத்து என வளர்ச்சி அடைந்தது.

இலக்கியங்களில் நாடகம்:

* தொல்காப்பிய மெய்பாட்டியல் நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்துள்ளது.

* கூத்தாட் டவைக்குல்லாத் தற்றே" என்னும் குறள் வழியாக நாடக அரங்கம் இருந்த செய்தி அறியலாம்.

* சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், "நாடகமேத்தும் நாடகக் கணிகை" என்று மாதவியை குறிப்பிடுகிறார்.

கூத்து:

* தனிப்பாடல்களுக்கு மெய்ப்பாடு தோன்ற ஆடுவதை நாட்டியம் என்றும், ஏதேனும் ஒரு கதையை தழுவி வேடம் புனைந்து ஆடுவதை நாடகம் என்றும் குறிப்பிட்டு வந்துள்ளார்.

* நாட்டியம், நாடகம் இரண்டிற்கும் பொதுவாகக் "கூத்து" என்ற சொல்லே வழக்கில் இருந்தது.

அடியார்க்கு நல்லார்:

* சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர்.

* இவர் கூத்துவகைகளைப் பற்றியும், நாடகநூல்கள் பற்றியும் தமது உரையில் கூறியுள்ளார்.

நாடக நூல்கள்:

* முறுவல், சயந்தம், செயிற்றியம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து, குணநூல், கூத்து நூல் முதலிய பல நாடக நூல்கள் நாடகத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது.

நாடகவியல்:

* பரிதிமாற்கலைஞர், செய்யுள் வடிவில் இயற்றிய தம் நாடகவியல் எனும் நூலில் நாடகம் அதன் விளக்கம், வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள் பற்றி கூறியுள்ளார்.

நாடக ஆராய்ச்சி நூல்கள்:

* சுவாமி விபுலானந்தர் - மதங்க சூளாமணி

* மறைமலையடிகள் - சாகுந்தலம்

* இவ்விரண்டு நூல்களும் நாடகம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள்.

தொழில்முறை நாடக அரங்குகள்:

* பம்மல் சம்பந்தனார், நாடகத்தமிழ்" என்ற தம் நூலில் தொழில் முறை நாடக அரங்குகளைப்பற்றிய செய்திகளை நன்கு ஆராய்ந்து எழுதியுள்ளார்.

காலம்தொறும் நாடகக்கலை:

* ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் "மத்தவிலாசம்" என்ற நாடக நூலை எழுதியுள்ளார்.

* பதினொன்றாம் நூற்றாண்டில் இராசராசசொழன் ஆட்சிக் காலத்தில் "இராசராசேச்சுவர நாடகம்" நடைபெற்றதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

* நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் குறவஞ்சி நாடகம் தோன்றின.

* பதினேழாம் நூற்றாண்டின் பிறபகுதியில் நொண்டி நாடகம் தோன்றின.

கட்டியங்காரன் உரையாடல்:

* பதினெட்டாம் நூற்றாண்டில் அருணாச்சலக் கவிராயரின் இராம் நாடகம், கோபால கிருட்டின பாரதியின் நந்தனார் சரித்திரம் ஆகியன கட்டியங்காரன் உரையாடலோடு முழுவதும் பாடல்களாக அமைந்தன.

சமுதாய சீர்திருத்த நாடகங்கள்:

* காசி விஸ்வநாதரின் "டம்பாச்சாரி விலாசம்".

* பேராசிரியர் சுந்தரனாரின் "மனோன்மணியம்"

தேசிய நாடகங்கள்:

* "கதரின் வெற்றி" நாடகம் தான் தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்.

* இதனைத் தொடர்ந்து தேசியக்கொடி, தேசபக்தி முதலிய நாடகங்கள் நடத்தப்பட்டன.

சிறப்பிடம் பெற்றவர்கள்:

* பரிதிமாற் கலைஞர் - தமிழ் நாடக பேராசிரியர்.

* சங்கரதாசு சுவாமிகள் - தமிழ் நாடக உலகின் இமயமலை, தமிழ் நாடக பேராசிரியர்

* பம்மல் சம்பந்தனார் - தமிழ் நாடக தந்தை

* கந்தசாமி - தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை

கவிமணியின் கூற்று:

* நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து" என்ற கவிமணியின் கூற்றிற்குஏற்ப மக்களின் கண்ணை, செவியை, கருத்தைக் கவரும் வகையிலும் நாடகங்கள் கதை அழகோடு கவிதை அழகையும் கொண்டு வாழ்வைத் தூய்மைப்படுத்தும் வகையிலும் அமைதல் வேண்டும்.

திருக்குறள்:

சொற்பொருள்:

* வழக்கு - நன்னெறி

* ஆன்ற - உயர்ந்த

* நயன் - நேர்மை

* மாய்வது - அழிவது

* அரம் - வாளைக் கூர்மையாக்கும் கருவி

* நண்பு - நட்பு

* கடை - பழுது

* நகல்வல்லர் - சிறிது மகிழ்பவர்

கம்பராமாயணம்

தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்

போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்

மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறஉம்

ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே

- கம்பர்

சொற்பொருள்:

* தாது - மகரந்தம்

* போது - மலர்

* பொய்கை - குளம்

* பூகம் - கமுகம்(பாக்கு மரம்)

ஆசிரியர் குறிப்பு:

* பெயர் - கம்பர்

* ஊர் - நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூர்.

* போற்றியவர் - சடையப்ப வள்ளல்

* இயற்றிய நூல்கள் - சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்.

* காலம் - கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டு எனக் கூறுவர்.

* வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில் காப்பியம் இயற்றியவர் - கம்பர். அந்நூலுக்கு இராமாவதாரம் எனப் பெயரிட்டார். அதுவே கம்பராமாயணம் என வழங்கலாயிற்று. எனவே இது வழிநூல் எனப்படுகிறது.

* கதை மாந்தரின் வடசொற் பெயர்களைத் தொல்காப்பிய நெறிப்படி தமிழ்ப்படுத்திய பெருமைக்குரியவர் கம்பர்.

நூல் குறிப்பு:

* ஆறு காண்டங்களைக் கொண்டது கம்பராமாயணம்.

* அவை: பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்.

* காண்டம் - பெரும் பிரிவு

* படலம் - உட்பிரிவு

* இப்பாடல் பால காண்டத்து ஆற்றுப்படலத்தில் உள்ளது.

* தற்போதைய உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாயும் சரயு நதியின் வளம் இதில் கூறப்பட்டுள்ளது.

தமிழர் வானியல்

வானியல் அறிவு:

* உலகம், ஐம்பூதங்களாகிய நிலம், நீர், வெப்பம், காற்று, வானம் ஆகிய ஐந்தும் உள்ளடக்கியது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் ஆதலின்

- தொல்காப்பியம்

இதுபோன்று புறநானூற்று பாடலும் கூறுகிறது.

மண்திணிந்த நிலனும்

நிலன் ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித்தலை இய தீயும்

தீ முரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும்பூத்தது இயற்கை போல்

உலகம் தட்டையா? உருண்டையா?

* பதினைந்தாம் நூற்றாண்டில் போலந்து நாட்டை சேர்ந்த நிக்கோலஸ் கோபர்நிகஸ் என்பவர் உலகம் தட்டை இல்லை உருண்டையானது என்று கூறினார். ஆனைல் அதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

* பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலீலியோ, உலகம் உருண்டையானது என்பதை தம் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்து சொன்னார்.

* ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் தம்குரலில் கூறியுள்ளார்.

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com