புறக்கணிப்பின் வலி மிக ஆழமானது
அது இதயத்தைக் கிழித்து
ரணம் மிக கொடுக்கும்..
புறக்கணிக்கப்படாதவர்கள்
பாக்கியவான்கள்
ஆனால் அப்படி எவரும் இல்லை..
எங்கோ எதற்கோ யாராலோ எப்படியோ
புறக்கணிக்கப்பட்டவர்களாலே
நிறைந்திருக்கிறது பூமி
மனிதன் மனங்களை புறக்கணித்தான்
நெருங்கியோர் வார்த்தையை
புறக்கணித்தான்
காதலை புறக்கணித்தான்
காதலிப்போரின் கண்ணீரை
புறக்கணித்தான்..
புறக்கணிக்க வேண்டிய மதத்தையோ
பல பிரிவினைகள் தோற்றுவிக்கும்
சாதியையோ
தாங்கி தாங்கி
பிடித்திருக்கிறான்
அதனை வைத்தே தன்னையழிக்கும்
கலைகள் கற்றிருக்கிறான்..
முடிந்தவரை
புறக்கணிக்காதீர்கள்
முழுதாய் புரிந்து
கொண்டவர்களையாவது..
முற்றிலும் புறக்கணியுங்கள்
புறக்கணிக்கும் கருத்துக்களை
மனதில் தினிப்போரை...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.