பால்கோவா கொழுக்கட்டை

பச்சரிசியை ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.  வாணலியில் அரை டம்ளர் தண்ணீரை ஊற்றி சூடாக்கி நெய்யும்,
பால்கோவா கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

பச்சரிசி-200 கிராம்

சர்க்கரை சேர்த்த பால்கோவா - 50கிராம்

துருவிய தேங்காய்-1 முடி

அவல்-1 மேசைக்கரண்டி

நெய்-1 மேசைக்கரண்டி

ஏலக்காய் - 2 பொடி செய்தது

உப்பு-1 சிட்டிகை

செய்முறை: அவலை பாலில் ஊற வைக்கவும். தேங்காய்த் துருவலை நெய்யில் வதக்கிக் கொள்ளவும்.

பச்சரிசியை ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.  வாணலியில் அரை டம்ளர் தண்ணீரை ஊற்றி சூடாக்கி நெய்யும், உப்பும் சேர்த்து மாவைக் கொட்டிக் கிளறிக் கொள்ளவும். மாவு கையில் ஒட்டாத பதம் வந்ததும் அதை அடுப்பிலிருந்து இறக்கி சிறு சிறு உருண்டைகளாக்கவும். பிறகு,  பாலில் ஊறிய அவல், பால்கோவா, தேங்காய்த் துருவல் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பூரணம் செய்து கொள்ளவும். அடுத்து மாவு உருண்டைகளைப் பூரிக்கு இடுவது போல உருட்டி, அதன் நடுவில் தயாராக இருக்கும் பால்கோவா பூரணத்தை வைத்து மூடிக் கொள்ளவும்.  இப்படி பிடித்தக் கொழுக்கட்டைகளை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் அடுக்கி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

பால்கோவா சுவையுடன் இந்தக் கொழுக்கட்டையின் சுவை அபாரமாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com