பாரதியாரின் வேத ரிஷிகளின் கவிதை - மூலமும் வரலாற்றுப் பின்னணியும் - பெ.சு.மணி; பக்.376; ரூ.150; பூம்புகார் பதிப்பகம், சென்னை -108; )044 - 2526 7543.
உபநிடதங்களை தமிழருக்கு அறிமுகம் செய்வதற்காக மொழிபெயர்க்கும் தொடக்கநிலை படைப்புதான் வேதரிஷிகளின் கவிதை. ஆனாலும் பாரதியார் இதனை தொடர்ந்து செய்யவில்லை. இருப்பினும் அவரது கவிதை முழுவதிலும் வேதம், உபநிடதங்களின் தாக்கம் விரவிக்கிடக்கின்றன. பாரதியாரின் வேதரிஷிகளின் கவிதையும், அவரது கவிதைகளில் இடம்பெறும் வேதக் கருத்துகளையும் கூறிச்செல்கிறது நூல். பாரதியோடு நின்றுவிடாமல், வேறுபல தளங்களிலும் விரிவாகச் சென்றுகொண்டே இருப்பதை தவிர்த்திருக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.