ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

சின்னத்தாய் காவியம்

சின்னத்தாய் காவியம் - கே.எஸ்.கே.நடேசன்; பக்.208; ரூ.200; ஓவியா பதிப்பகம், 138, எடமால் தெரு, தேனி-625531.

News image
Updated On :9 செப்டம்பர் 2025, 10:43 am IST

சின்னத்தாய் காவியம் - கே.எஸ்.கே.நடேசன்; பக்.208; ரூ.200; ஓவியா பதிப்பகம், 138, எடமால் தெரு, தேனி-625531.
 சிவகாசி அருகிலுள்ள குக்கிராமத்தில் தொடங்கும் இந்த நாவல், சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய சமூக ஏற்றத் தாழ்வுகளை விவரிக்கிறது.அதனால் ஏற்பட்ட வடுக்களோடு பஞ்சம் பிழைக்கச் சென்று,முன்னேற்றம் அடைந்த ஒரு குடும்பத்தின் வெற்றியையும் சித்திரிக்கிறது. உழைப்புதான் உயர்வை தரும் என்ற நம்பிக்கையை வாசிப்பவர்கள் மனதில் ஆழமாகப் பதிவு செய்கிறது.
 பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க சில பிரிவு மக்களை அனுமதிக்க மறுப்பதை சின்னத்தாய் கதாபாத்திரம் எதிர்க்கிறது. சாதியக்கொடுமைகளுக்கு எதிரான சிந்தனையைத் தூண்டுகிறது நூல்.
 நாவலின் நாயகனான கந்தவேல், வாத்தியார் சார், மாரி போன்றவர்கள் கடவுள் மறுப்பாளர்களாக இருக்கின்றனர். எனினும் தெய்வ நம்பிக்கையின் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 அந்தக் காலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயமாகச் சுட்டிக்காட்டப்பட்டு துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டும், செருப்பைக் கையில் தூக்கிக் கொண்டும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டதாக இருந்த ஒரு பிரிவு மக்கள், இன்றைக்கு தொழில்துறையில் முன்னேற்றம் அடைந்ததற்கு,அந்த மக்களிடமிருந்த உழைப்பும் நாணயமும் முக்கிய காரணம் என்பதை உறுதிப்படுத்துகிறது இந்நாவல்.
 சூரியன் போன்றது அல்ல வாழ்க்கை. அதில் நிலவைப் போல் தேய்பிறையும், வளர்பிறையும் மாறி மாறி வந்து செல்லும். தேய்பிறையில் துவண்டு விடுபவன், வளர்பிறையை நோக்கி பயணிக்க முடியாது. முயற்சிப்பவனே முழு நிலவைக் காண்கிறான் என நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரை நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த குடும்பத்தின் உயர்வு மட்டுமே சித்தரிக்கப்பட்டிருந்தாலும், உழைப்பு உயர்வைத் தரும் என்ற கருத்து
 சாதி பாகுபாடுகளைக் கடந்து அனைவருக்கும் பொதுவானதாக இருப்பது சிறப்பு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.