தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஆரியபட்டரிலிருந்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வரை ஈர்ப்பு விசை சுருக்கமான வரலாறு

அறிவியல்பூர்வமாக எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதையும் கற்றுத் தரும் நூலாகவும் இது இருக்கிறது.

News image
Updated On :10 மார்ச் 2025, 5:46 pm IST

ஆரியபட்டரிலிருந்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வரை ஈர்ப்பு விசை சுருக்கமான வரலாறு - த.வி.வெங்கடேஸ்வரன்; பக்.176; ரூ.250; அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி; ✆04259-236030.

பூமியின் ஈர்ப்பு விசை தொடர்பான வரலாற்று பூர்வமான, அறிவியல்பூர்வமான பதிவு இந்நூல். பூமி தட்டையானது என்று வால்மீகி ராமாயணம் கூறுகிறது. ஆனால் இந்த கருதுகோளே அன்றைக்குப் பெரும் சாதனையாக இருந்திருக்கிறது.

ஆரியபட்டர் காலத்தில் பூமி கோளவடிவம் கொண்டதாகக் கருதப்பட்டது. பூமியின் ஈர்ப்பு விசையால் மனிதன், விலங்கு, மரம் ஆகியவை பூமியோடு ஒட்டிக் கொண்டிருப்பதாக ஆரியபட்டர் கூறியிருக்கிறார். அதற்கு பின்னர் வந்த பிரமகுப்தா, பாஸ்கராச்சாரியர் பூமியின் ஈர்ப்பு விசை குறித்த மேம்பட்ட கருத்துகளை முன்வைத்தனர்.

அரிஸ்டாட்டில் கிராவிட்டி, லெவிட்டி என்ற இரு ஈர்ப்புத் தன்மைகள் குறித்து கூறினார். பீரங்கி குண்டுகள் செல்லும் பாதை நேர்கோடு என்று அவர் சொன்னதை டார்ட்டாக்ளியா மறுத்தார்.

கலிலியோ வெவ்வேறு எடை கொண்ட பொருள்கள் மேலிருந்து கீழே விழும்போது ஒரே வேகத்தில் விழும் என்று புவியீர்ப்பு விசை தொடர்பாக புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டார்.

சூரியனை கோள்கள் சுற்றிவருவதும் பெரும் விசையின் முடுக்கத்தால்தான் என்று கெப்லர் கூறினார். அதன் பின்னர் நியூட்டனின் இது குறித்த ஆராய்ச்சிகளின் முடிவு மூன்று விதிகளாக உருவெடுத்தன.

ஐன்ஸ்டைனின் சிறப்பு சார்பியல் தத்துவம் ஒளியின் வேகத்தைவிட எந்தப் பொருளும் அதிக வேகத்தில் போக முடியாது என்று கூறியது. ஐன்ஸ்டைனின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னரும் நிகழ்ந்த அறிவியல் முன்னேற்றங்களையும் இந்நூல் விளக்குகிறது. அறிவியல்பூர்வமாக எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதையும் கற்றுத் தரும் நூலாகவும் இது இருக்கிறது.

ஆரியபட்டரிலிருந்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வரை ஈர்ப்பு விசை சுருக்கமான வரலாறு - த.வி.வெங்கடேஸ்வரன்; பக்.176; ரூ.250; அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி; ✆04259-236030.

பூமியின் ஈர்ப்பு விசை தொடர்பான வரலாற்று பூர்வமான, அறிவியல்பூர்வமான பதிவு இந்நூல். பூமி தட்டையானது என்று வால்மீகி ராமாயணம் கூறுகிறது. ஆனால் இந்த கருதுகோளே அன்றைக்குப் பெரும் சாதனையாக இருந்திருக்கிறது.

ஆரியபட்டர் காலத்தில் பூமி கோளவடிவம் கொண்டதாகக் கருதப்பட்டது. பூமியின் ஈர்ப்பு விசையால் மனிதன், விலங்கு, மரம் ஆகியவை பூமியோடு ஒட்டிக் கொண்டிருப்பதாக ஆரியபட்டர் கூறியிருக்கிறார். அதற்கு பின்னர் வந்த பிரமகுப்தா, பாஸ்கராச்சாரியர் பூமியின் ஈர்ப்பு விசை குறித்த மேம்பட்ட கருத்துகளை முன்வைத்தனர்.

அரிஸ்டாட்டில் கிராவிட்டி, லெவிட்டி என்ற இரு ஈர்ப்புத் தன்மைகள் குறித்து கூறினார். பீரங்கி குண்டுகள் செல்லும் பாதை நேர்கோடு என்று அவர் சொன்னதை டார்ட்டாக்ளியா மறுத்தார்.

கலிலியோ வெவ்வேறு எடை கொண்ட பொருள்கள் மேலிருந்து கீழே விழும்போது ஒரே வேகத்தில் விழும் என்று புவியீர்ப்பு விசை தொடர்பாக புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டார்.

சூரியனை கோள்கள் சுற்றிவருவதும் பெரும் விசையின் முடுக்கத்தால்தான் என்று கெப்லர் கூறினார். அதன் பின்னர் நியூட்டனின் இது குறித்த ஆராய்ச்சிகளின் முடிவு மூன்று விதிகளாக உருவெடுத்தன.

ஐன்ஸ்டைனின் சிறப்பு சார்பியல் தத்துவம் ஒளியின் வேகத்தைவிட எந்தப் பொருளும் அதிக வேகத்தில் போக முடியாது என்று கூறியது. ஐன்ஸ்டைனின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னரும் நிகழ்ந்த அறிவியல் முன்னேற்றங்களையும் இந்நூல் விளக்குகிறது. அறிவியல்பூர்வமாக எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதையும் கற்றுத் தரும் நூலாகவும் இது இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.