124. வரமதே கொளா - பாடல்  5

சிவஞானம்
124. வரமதே கொளா - பாடல்  5


பாடல் 5:

    காணி ஒண் பொருள் கற்றவர்க்கு ஈகை உடைமையோர் அவர் காதல்                     செய்யும் நல்
    தோணி வண்புரத்து ஆணி என்பவர் தூமதியினரே

விளக்கம்:

காணி=நிலம்; ஒண்பொருள்=சிறந்த வழியில் ஈட்டிய செல்வம்; வண்புரம்=வளமை மிகுந்த நகரம்; தூமதி=தூய்மையான சிவஞானம். தோணிபுரம் என்ற பெயரின் இரண்டாவது எழுத்து ணி. இந்த எழுத்து இரண்டு அடிகளிலும் இரண்டாவது எழுத்தாக வருகின்றது.  

பொழிப்புரை: 

நிலங்களையும் சிறந்த வழியில் ஈட்டிய பொருட்களையும் கற்றவர்களுக்கு கொடையாக கொடுத்து உதவும் நல்ல மனம் உடைய மனிதர்கள் விரும்பி வாழ்கின்றதும், அடியார்களுக்கு பல வகையிலும் நன்மை புரிவதும் ஆகிய வளமை மிகுந்த தோணிபுரத்தில் வீற்றிருப்பவன் சிவபெருமான்; அந்த பெருமானை மாற்றுரைக்கும் ஆணிப் பொன் போன்று உயர்ந்த அரிய பொருள் என்று சொல்லித் தொழும் அடியார்கள் தூய்மையான சிவஞானம் உடையவர்கள் அவார்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com