

இந்தியா ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கியது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா ஏ அணி 135 ரன்களும், ஆஸ்திரேலியா ஏ அணி 349 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 2-ஆவது இன்னிங்ஸில் விளையாடிய இந்தியா ஏ அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில், 83 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்தது. 53 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்நிலையில் 4-ம் நாளான இன்று ஆட்டத்தைத் தொடங்கிய இந்தியா ஏ அணி, 274 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. சாந்து, ஓ'கீஃபி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.
இதன்பிறகு 61 ரன்கள் என்கிற எளிதான வெற்றி இலக்குடன் ஆடத் தொடங்கியது ஆஸ்திரேலியா ஏ அணி. அதன் தொடக்க வீரர்கள் அதிரடியாக ஆடினார்கள். 6.1 ஓவர்களில் 62 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா ஏ அணி.
இதனால் 2 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா ஏ அணி வெற்றி பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.