தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சென்னை முத்தரப்புப் போட்டி: அட்டவணையில் மாற்றம்!

தென் ஆப்பிரிக்க வீரர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2015, 7:30 am

சென்னையில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் கலந்துகொள்ளும் முத்தரப்பு ஒருநாள் போட்டியின் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க வீரர்கள் கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள வணிக வளாகம் ஒன்றிற்கு சென்று உணவு அருந்தினர். அந்த உணவு அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது. இதனால் ஞாயிற்றுக்கிழமை போட்டி நடைபெற்ற போதே குவின்டன் டி காக், தோகோசிசி ஷேசி ஆகியோர் பாதியில் விலகினர். மாலையில், வேன் பர்னல், பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், கோடி செட்டி, கேமரான் டெல்போர்ட், பயிற்சியாளர் வின்சென்ட் பர்னெஸ், செய்தித் தொடர்பாளர் வால்வோ ஆகியோருக்கும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்களும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் நிலவும் வெப்பநிலையும் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு களைப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் போட்டி அட்டவணையில் மாற்றம் ஏற்பட்டது. போட்டி அட்டவணைப்படி திங்கள்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க - ஆஸ்திரேலிய ஏ அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால் தென் ஆப்பிரிக்க அணியின் 10 வீரர்கள் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் திங்கள்கிழமை நடைபெறுவதாக இருந்த போட்டியில் இந்திய அணியை விளையாடுமாறு தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம், இந்திய ஏ அணி பயிற்சியாளர் ராகுல் திராவிட்டிடம் கோரிக்கை விடுத்தது. இதற்கு திராவிட்டும் ஒப்புக் கொண்டார். இதனால் திங்கள்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய - ஆஸ்திரேலிய ஏ அணிகள் மோதின.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க வீரர்கள் பிறகு டிஸ்சார்ஜ் ஆகி நலம் பெற்றுவிட்டாலும் வீரர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு அட்டவணையில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி ஆகஸ்ட் 12-ம் தேதி ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் மோதுகின்றன. ஆகஸ்ட் 13-ம் தேதி இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் மோதுகின்றன. ஆகஸ்ட் 14 அன்று இறுதிப் போட்டி நடக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.