தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உணர்வுபூர்வமான உரையுடன் ஓய்வு பெற்ற சங்ககாரா!

மேத்யூஸ் உங்களிடம் அருமையான அணி உள்ளது, அருமையான எதிர்காலம் உள்ளது.

Updated On :24 ஆகஸ்ட் 2015, 12:14 pm

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியுடன் இலங்கை அணி வீரர் சங்ககாரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

2-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு, சங்ககாராவுக்குப் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. சுனில் கவாஸ்கர் அவரை மிகவும் பாராட்டி பேசினார். இந்திய வீரர்கள் தங்கள் டெஸ்ட் உடையில் கையெழுத்திட்டு சங்ககாராவுக்குப் பரிசளித்தார்கள்.

பிறகு மிகவும் உணர்வுபூர்வமாக சங்ககாரா பேசியதாவது:

நான் நிறைய பேருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய அனைத்து முன்னாள் கேப்டன்கள், என்னுடன் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் நன்றி. நீங்கள் எனக்கு அளித்த ஆதரவும் ஊக்கமும் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது.

நிறைய பேர் என்னிடம் எனக்கு தூண்டுகோலாக அமைந்தது எது என்று கேட்கிறார்கள். எனது பெற்றோர். மன்னிக்கவும், நான் உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக கூறவில்லை. நீங்கள்தான் எனது தூண்டுகோல். நான் வீட்டில் பாதுகாப்பாக உணர்ந்தேன். நாம் நம் குடும்பத்தை தேர்ந்தெடுக்க முடியாது என்று கூறுவார்கள், ஆனால் நான் உங்கள் குழந்தையாக பிறந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் எப்போதும் உணர்ச்சிவசப்பட மாட்டேன். ஆனால் எனது பெற்றோரும் உறவினர்களும் உள்ள இந்தத் தருணம் மிகவும் அரிய தருணம் ஆகும்.

Story image

எனது பெரிய சாதனைகள் பற்றி கேட்கிறார்கள். சதங்கள், உலகக் கோப்பை வெற்றி. இதைத் தாண்டி நான் பார்ப்பது, கடந்த 30 ஆண்டுகளில் நான் பெற்ற நண்பர்களை. அவர்கள் இந்தத் திங்கள் கிழமை அன்று நான் ஆடுவதைப் பார்க்க வந்துள்ளார்கள். நான் வென்றாலும் தோற்றாலும் என்னை எப்போதும் நேசிக்கும் குடும்பம். இது என் பெரிய சாதனை.

இறுதியாக விராட் மற்றும் இந்திய அணியினர் அளித்த அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. நான் ஓய்வு பெறும் தருணத்தில் கடினமான டெஸ்ட் போட்டியையே விரும்பினேன். அதனை இந்திய அணி எனக்கு அளித்ததைப் பெரிதாக நினைக்கிறேன். நீங்கள் எப்போதும் எங்களுடைய கடினமான எதிரணியினராக இருந்துள்ளீர்கள்.

கடைசியாக மேத்யூஸ் மற்றும் என் அணியினருக்கு. மேத்யூஸ் உங்களிடம் அருமையான அணி உள்ளது, அருமையான எதிர்காலம் உள்ளது. பயமில்லாமல் விளையாடுங்கள். வெற்றிக்காக ஆடும்போது தோற்பதைப் பற்றி கவலைப்படவேண்டாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.