இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளின் டெஸ்ட் தொடர் இனிமேல் விடுதலைக் கோப்பை அதாவது Freedom Trophy என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளதாவது:
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடும் தொடர்களுக்கு மகாத்மா காந்தி - நெல்சன் மண்டேலா தொடர் எனப் பெயர் வைக்கப்படும். இரு அணிகளின் டெஸ்ட் தொடர் இனிமேல் விடுதலைக் கோப்பை (Freedom Trophy) என அழைக்கப்படும் என அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணி அடுத்த மாதம் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்கிறது. முதலில் 3 டி20, 5 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்பிறகு நவம்பர் 5-ம் தேதி மொஹலியில் முதல் டெஸ்ட் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.