சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

விம்பிள்டன்: நடால் அதிர்ச்சித் தோல்வி!

இரண்டுமுறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற நடால் இந்தச் சுற்றில் எளிதாக வென்றுவிடுவார் என்று...

News image
Updated On :3 ஜூலை 2015, 6:29 am

பிரிட்டனில் நடைபெற்று வரும் புகழ் பெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் வியாழக்கிழமை இரண்டாவது சுற்றுக்கான ஆட்டங்கள் நடைபெற்றன.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று ரஃபெல் நடாலும் ஜெர்மனியைச் சேர்ந்த  டஸ்டின் பிரவுனும் மோதினார்கள். இரண்டுமுறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற நடால் இந்தச் சுற்றில் எளிதாக வென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தரவரிசையில் 102-வது இடத்தில் உள்ள டஸ்டின் பிரவுன் அமர்க்களமாக ஆடி 7-5 3-6 6-4 6-4 என நடாலைத் தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். தொடர்ந்து மூன்று வருடங்களாக கால் இறுதிக்கு முந்தைய சுற்றுகளில் தோல்வியடைந்து போட்டியை விட்டு வெளியேறிய நடாலுக்கு இந்த வருடமும் அதேபோலொரு நிலைமையே ஏற்பட்டுள்ளது.

டஸ்டின் பிரவுன் இதற்கு முன்பு 2014ல் நடாலுடன் மோதியபோதும் வெற்றி கண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.