இந்தியா - நியூசிலாந்து இடையே கிறிஸ்ட் சர்ச்சில் நடந்து வரும் டேவிஸ் கோப்பை ஆசியா-ஓசியானா குரூப் 1 டென்னிஸ் போட்டியில் இரண்டாவது நாளன்று நடந்த இரட்டையர் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளது. இதனால் நியூசிலாந்து அணி 2-1 என முன்னணியில் உள்ளது.
நேற்று நடந்த ஒற்றையர் போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி கண்டு 1-1 என சமநிலையில் இருந்தன. இன்று நடந்த இரட்டையர் போட்டியில் இந்தியா சார்பாக ரோஹன் பொபன்னா - சகத் மைனேனி ஆகியோரும் நியுசிலாந்து அணி சார்பாக டேனியல்-சிடக் ஆகியோரும் பங்கேற்றார்கள். இந்தப் போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 6-3 7-6 6-3 என்ற நேர் செட்களில் நியூசிலாந்து ஜோடி வெற்றி கண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இந்த வெற்றியினால் நியூசிலாந்து அணி 2-1 என முன்னணியில் உள்ளது. ஞாயிறு அன்று நடைபெறும் இரு ஒற்றையர் போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் போதும், அந்த அணி செப்டம்பரில் நடக்க உள்ள உலக குரூப் பிளே ஆஃப்' சுற்றுக்குத் தகுதி பெற்று விடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவு

ஆம்பூரில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்

வாக்காளா்களை வரவேற்ற ரோபோ!

வரிசையில் நின்று வாக்களித்த திருப்பத்தூா் ஆட்சியா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

