

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.காஷ்யப் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவர் காலிறுதியில் உலகின் நெ. வீரர் சென் லாங்கைத் தோற்கடித்து அதிர்ச்சியளித்தார்.
இன்று ஜகார்த்தாவில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் உலகின் நெ.1 வீரரை எதிர்கொண்டார் காஷ்யப். முதல் சுற்றில் சென் லாங் 21-14 என வெற்றி பெற்றார். ஆனால், பிறகு புயலாக ஆடிய ஸ்ரீகாந்த் 21-17, 21-14 என கடைசி இரண்டு செட்களையும் கைப்பற்றி போட்டியில் வெற்றி பெற்றார். இந்தப் போட்டி ஒரு மணி நேரம் நீடித்தது.
இதற்கு முன்பு இருவரும் மோதிய போட்டிகளில் 7-1 என முன்னிலை பெற்றிருந்தார் சென் லாங். இதேபோட்டியில், 2012-ல் சென் லாங்கைத் தோற்கடித்தார் காஷ்யப். அதற்குப் பிறகு இப்போதுதான் அவரைத் தோற்கடிக்க முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.