

10 முன்னணி செஸ் வீரர்கள் கலந்துகொள்ளும் மூன்றாவது நார்வே செஸ் போட்டியின் முதல் சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சன் எதிர்பாராத விதத்தில் தோல்வி அடைந்துள்ளார். நேற்றைய போட்டியின் ஒரே டிரா, ஆனந்த் - பெபியானோ கருணா ஆட்டத்தில் கிடைத்தது.
உலகின் முன்னணி வீரர்கள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டி நேற்று தொடங்கியது. இதற்கு முன் நடந்த இரு நார்வே செஸ் போட்டிகளிலும் கார்ல்சன் வெல்லாததால் இந்தப் போட்டியை வெல்ல அவர் ஆர்வத்துடன் உள்ளார்.
டொபலோவுடனான போட்டியில் 60-வது நகர்த்தலின்போது கார்ல்சன் வெற்றி பெறும் நிலையில் இருந்தார். ஆனால், போட்டியின் விதிமுறைப்படி அவருக்குரிய நேரங்களைப் பயன்படுத்தியிருந்ததால் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த கார்ல்சன் மிகவும் வருத்தத்துடன் அரங்கை விட்டு வெளியேறினார். ஆனந்த் - பெபியானோ இடையேயான போட்டி டிராவில் முடிவடைந்தது.
இரண்டாவது சுற்றில், ஆனந்த் அனிஷ் கிரியுடனும் கார்ல்சன் பெபியானோவுடனும் மோதுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.