

முன்னணி வீரர்கள் கலந்துகொள்ளும் நார்வே செஸ் போட்டியின் ஆறாவது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பிரான்சின் மேக்ஸிம் வாச்சியர் லாக்ரேவைத் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் 4 புள்ளிகளுடன் நாகமுராவுடன் இணைந்து 2-ம் இடத்தில் உள்ளார்.
நேற்றைய சுற்றிலும் டொபலோவ் ஜெயித்ததால் 5.5 புள்ளிகளுடன் அவர் முதல் இடத்தில் உள்ளார். கார்ல்சன் - நாகமுரா இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 2 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள கார்ல்சன் 7-ம் இடத்தில் உள்ளார்.
இன்னும் மூன்று சுற்றுகளே மீதமுள்ள நிலையில் இந்த வருட நார்வே செஸ் போட்டியை பல்கேரியாவைச் சேர்ந்த டொபலோவ் தான் வெல்வார் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.