இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் இஷாந்த் சர்மா தனது 200-வது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார். அவர் விளையாடும் 65-வது டெஸ்ட் இது.
மேத்யூஸின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 4-வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்கிற பெருமையை அடைந்தார்.
இதற்கு முன்னால் கபில்தேவ் (434 விக்கெட்டுகள்), ஜாகீர் கான் (311), ஸ்ரீநாத் (236) ஆகியோர் 200 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக எடுத்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.