ஒலிம்பிக் கிராமம் இன்று திறக்கப்பட்டது
விளையாட்டு வீரர்களின் கனவான ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கரொனா நோய்த் தொற்று அதிகம் இருக்கும் காரணத்தால் கடும் கட்டுப்பாடுகளுடன் அமைப்பட்டிருந்த ஒலிம்பிக் கிராமம் பெரிய பாதுகாப்பு வசதிகளுடன் இன்று திறக்கப்பட்டிருக்கிறது.
206 நாடுகளைச் சேர்ந்த 11000 விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் . இதனால் ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியே செல்லும் சூழல் வந்தாலும் அவர்கள் தினமும் பரிசோதனை செய்யப்படுவார்கள் என்றும் ஒலிம்பிக் கிராமத்தில் குடியிருப்பவர்களில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்திருக்கிறது.