ஐபிஎல்: பெங்களூரு அணி அசத்தல் வெற்றி

ஜோஷ் ஹேசல்வுட் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்ற, 20 ஓவர்கள் முடிவில் லக்னெள அணி 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்தது.  
பெங்களூரு அணி வீரர்கள்
பெங்களூரு அணி வீரர்கள்

ஐபிஎல் போட்டியின் 31வது ஆட்டம் மும்பை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அனுஜ் ராவத், டூ பிளஸ்ஸி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் சமீராவின் பந்தில் 4 ரன்களிலேயே ராவத் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து வந்த கோலியும் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றமளித்தார். அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் ரன் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். மேக்ஸ்வெல் 23 ரன்களும், ஷபாஸ் அகமது 26 ரன்களும் எடுத்தனர். எனினும் மறுபுறத்தில் அதிரடியாக ஆடிய டூ பெளஸ்ஸி 64 பந்துகளில் 96 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்களை எடுத்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய லக்னெள அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பல் ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

இருப்பினும், அதிரடியாக விளையாடிய க்ருணால் பாண்டியா 28 பந்துகளில் 42 ரன்களை விளாசினார். ஜோஷ் ஹேசல்வுட் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்ற, 20 ஓவர்கள் முடிவில் லக்னெள அணி 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com