முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

2022 டி20 உலகக் கோப்பையின் முதல் சதம்!

தென்னாப்பிரிக்காவின் ரில்லி ரூசோவ் 2022 டி20 உலகக் கோப்பையின் முதல் சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார்.

News image

படம்: டிவிட்டர்/ ஐசிசி

Updated On :27 அக்டோபர் 2022, 10:38 am IST

தென்னாப்பிரிக்காவின் ரில்லி ரூசோவ் 2022 டி20 உலகக் கோப்பையின் முதல் சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் தென்னாப்பிரிக்காவும் வங்கதேசமும் இன்று மோதி வருகின்றது. தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா பேட்டர் ரூசோவ் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 52 பந்துகளில் சதமடித்து, தொடரின் முதல் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். ஒட்டுமொத்த டி20 உலகக் கோப்பையின் 10வது சதம் இதுவாகும்.

தொடர்ந்து 19வது ஓவரில் 109 ரன்கள் எடுத்திருந்தபோது ரூசோவ் ஆட்டமிழந்தார். அதேபோல், தொடக்க ஆட்டக்காரர் டி காக் 38 பந்துகளில் 63 ரன்கள் எடுத்துள்ளார்.

20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை தென்னாப்பிரிக்கா அணி குவித்துள்ளது. வங்கதேச தரப்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.