தென்னாப்பிரிக்காவின் ரில்லி ரூசோவ் 2022 டி20 உலகக் கோப்பையின் முதல் சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் தென்னாப்பிரிக்காவும் வங்கதேசமும் இன்று மோதி வருகின்றது. தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா பேட்டர் ரூசோவ் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 52 பந்துகளில் சதமடித்து, தொடரின் முதல் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். ஒட்டுமொத்த டி20 உலகக் கோப்பையின் 10வது சதம் இதுவாகும்.
இதையும் படிக்க | உணவு வகை: இந்திய அணி அதிருப்தி
தொடர்ந்து 19வது ஓவரில் 109 ரன்கள் எடுத்திருந்தபோது ரூசோவ் ஆட்டமிழந்தார். அதேபோல், தொடக்க ஆட்டக்காரர் டி காக் 38 பந்துகளில் 63 ரன்கள் எடுத்துள்ளார்.
20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை தென்னாப்பிரிக்கா அணி குவித்துள்ளது. வங்கதேச தரப்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










